மக்கள் மீதும் தேசத்தின் மீதும் கவலை கொள்ளாத இண்டி கூட்டணி - அசாமில் நட்டா ஆவேசம்..!
By : Sushmitha
அசாம் மாநிலம் கோகராஜார் மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் நட்டா உரையாற்றியுள்ளார். அப்போது, வடகிழக்கில் கிட்டத்தட்ட 70 சதவிகித பகுதிகளின் இருந்த சிறப்பு ஆயுதப்படை சட்டம் இப்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் 70 முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரதமர் மோடி 70 முறை வந்துள்ளார். மேலும் பிரதமர் வந்ததைப் போன்று வடகிழக்கு மாநிலங்களுக்கு மத்திய அமைச்சர்கள் 680 முறைக்கும் மேல் வந்துள்ளனர். காங்கிரசின் கொள்கை என்ன? தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியை செய்து வருகிறது.
இண்டி கூட்டணியினர் மக்களின் நலனை பற்றியோ தேசத்தின் வளர்ச்சியை பற்றியோ சிறிதும் கவலை கொள்வதில்லை, மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றனர் என்று பேசி உள்ளார்.
Source : Dinamalar