Kathir News
Begin typing your search above and press return to search.

பயங்கரவாதிகள் தஞ்சமடையும் பகுதி மேற்கு வங்கம்.... மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தாக்கு!

பயங்கரவாதிகள் தஞ்சமடையும் பகுதி மேற்கு வங்கம்.... மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தாக்கு!

SushmithaBy : Sushmitha

  |  27 April 2024 12:53 PM GMT

இமாச்சலப் பிரதேசம் ஹமிர்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், நாட்டில் அணு ஆயுதங்களை அழிக்கப் போவதாகவும் உங்கள் குழந்தைகளின் சொத்துக்களை முஸ்லிம்களுக்கு கொடுக்க உள்ளதாகவும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. உங்களுக்கு காங்கிரஸ் அரசு வேண்டுமா அல்லது நம்பிக்கை உள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வேண்டுமா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

மேலும், பொதுக்கூட்டத்தை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், வெடிகுண்டு வெடிப்பு என்பது மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில் சாதாரணமாகிவிட்டது!

ஊழல்வாதிகள், குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகள் என அனைவருமே மேற்கு வங்கத்தில் தான் தஞ்சம் அடைந்துள்ளார்கள்..! மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கு சீர் குலைந்து விட்டது, என்ன மாதிரியான அரசு இது..? என்று கூறியுள்ளார்.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News